புழல்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டு அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் சுமார் ₹6 கோடி மதிப்பில், கடந்த ஆண்டில் 150 படுக்கை வசதி மற்றும் 3 மாடிகளுடன் கூடிய அவசரகால சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டால் புழல், செங்குன்றம், பம்மதுகுளம், பொத்தூர், வடகரை, பாலவாயல், விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் பல்வேறு அவசரகால சிகிச்சைகளுக்காக நீண்ட தூரம் அலையும் மக்கள் பெரிதும் பயனடைவர்.