மேலூர் : மேலூரில் 20 வருடத்திற்கு பிறகு எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது. மேலூர் சிவகங்கை ரோட்டில் 20 வருடத்திற்கு முன்பு அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ ராஜமாணிக்கம் பொறுப்பில் இருந்த போது தொகுதி எம்எல்ஏவுக்காக அலுவலகம் ஒன்று கட்டும் பணி துவங்கியது. அதனை தொடர்ந்து மேலூர் தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சாமி தேர்தெடுக்கப்பட்டார். புதிய எம்எல்ஏ கட்டிய அந்த கட்டிடத்திற்கு தான் செல்ல விரும்பவில்லை என கூறி விட்டு மேலூர் நகராட்சியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனது அலுவலகத்தை திறந்தார். 3 மாதம் அங்கு செயல்பட்ட அலுவலகம் மேலூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தனியார் இடத்திற்கு மாற்றப்பட்டது. 3 முறை சாமியே எம்எல்ஏவாக தொடர்ந்ததால் அரசு பணத்தில் கட்டப்பட்ட அந்த எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படவே இல்லை. ஆனால் ஆண்டுதோறும் அந்த அலுவலகத்தை மராமத்து பார்த்ததாக கணக்கு மட்டும் எழுதப்பட்டு வந்தது தனி கணக்கு.