ராமேஸ்வரம்: தமிழக கடலில் மீன்களை பாதுகாக்கும் வகையில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 60 நாட்கள், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி மற்றும் வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டன. இதனால் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்பட்டது. தடைக்காலத்தில் நாட்டுப்படகு மீனவர்களால் பிடித்து வரப்பட்ட மீன்களின் விலையும் பலமடங்கு அதிகரித்தது. மேலும், காற்று காரணமாக கடந்த சில நாட்களாக மீன் வரத்து போதிய அளவு இல்ைல. வேலையில்லாததையடுத்து ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றுத்தொழில் தேடி சென்றிருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தின் மற்ற ஊர்களுக்கு திரும்பி வந்தனர்.