சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, அமமுகவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் அதிமுகவில் மீண்டும் இணையும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்த வண்ணம் உள்ளன. 3 நாட்களுக்கு முன்னதாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இவர் முன்னாள் முதலவர் ஜெயலலிதா இறந்த பிறகு அமமுகவில் இணைந்தார்.