இங்கிலாந்து: வைர வியாபாரி நீரவ் மோடியை ஜாமினில் விடுவிப்பது தொடர்பான விசாரணையில் இங்கிலாந்து வேல்ஸ் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்க உள்ளது. நீரவ் மோடியை ஜாமினில் விட்டால் சாட்சிகளை மிரட்டுவார் என்றும் சரணடைய மாட்டார் என்றும் வெளிநாட்டுக்கு தப்பி செல்வர் என்றும் இங்கிலாந்து அரசு தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது. ஆனால் இதனை மறுத்த நீரவ் மோடியின் வழக்கறிஞர் கிளார் மான்ட்கோமரி, நீரவ் மோடி விக்கிலீக்ஸ் அசாஞ்சே போன்ற சக்தி வாய்ந்த மனிதர் அல்ல, அவர் ஒரு சாதாரண வைர வியாபாரி என்று வாதித்தார்.