கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வல்லவிளை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்தது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலை புயலாக மாறியது. இந்த புயல் தற்போது குஜராத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் புயல் காரணமாக கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு கடற்கரை பகுதியான அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.