ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த துணை குழுவானது காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பவானி சாகர் அணைக்கு வந்த அவர்கள் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன்முரளி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித்துறை அதிகரிகளிடன் விவரங்களையும் கேட்டறிந்தனர்.