சென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனதற்கு அதிமுகவின் இரட்டைத் தலைமை நிர்வாகமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஒற்றை தலைமையில் இயங்கினால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்றார். மேலும் இரட்டைத் தலைமை தேவையில்லை என்று அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கும் திருநாவுக்கரசர் பதிலளித்தார்.