புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்க ள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து முதல்வர் யோகி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பிரசாந்த் கனோஜியா மீது லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கன்ச் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளியன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.