இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ரணில் விக்ரமசிங்கே தலைமையில் சிறப்பான வரவேற்பு

கொழும்பு: மாலத்தீவு நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தியா - இலங்கை வர்த்தம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு குறித்து இருநாட்டு தலைவர்கள் பேசவுள்ளனர். அங்கு நடைபெறும் மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதனையடுத்து, சிறிசேனா அளிக்கும் மதிய விருந்தில் மோடி பங்கேற்கிறார். பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

2.05 மணிக்கு இலங்கைவாழ் இந்தியர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பின்னர் 3 மணிக்கு கொழும்புவில் இருந்து இந்தியா திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

Related Stories: