திருமலை: சென்னையைச் சேர்ந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா கடந்த 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் உள்ளூர் ஆலோசகர் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீகிருஷ்ணா பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.