புதுடெல்லி: எஸ்எஸ்சி கேள்வித்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) பட்டதாரிகள் அளவிலான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை கடந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி நடத்தியது. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக அதற்கான கேள்வித்தாளும் கீஆன்சரும் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.