கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளியை சேர்ந்த முனிராஜ் மகள் ரமணி(38). இவர், கடந்த 2012ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார். பின்னர், அவரிடம் கல்வி சான்றிதழை கேட்டுள்ளனர். அவரும் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார். அதிகாரிகள், அந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, போலி என தெரியவந்தது. போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ரமணி மீது, கடந்த மாதம் 25ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர் ராமமூர்த்தி, மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதரிடம் புகார் அளித்தார்.