வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக கடும் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக நான்கு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்வரத்து முற்றிலும் குறைந்தது. கடலில் காற்று குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.