குழாய் இணைப்பு பணிக்காக அண்ணாநகர் கழிவுநீரேற்று நிலைய இயக்கம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் அண்ணாநகர் கழிவுநீரேற்று நிலைய இயக்கம் நாளை நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 சென்னை குடிநீர் வாரியம் இமயம் காலனி கழிவுநீரேற்று நிலையத்தில் புதியதாக பதிக்கப்பட்டுள்ள 450/200 மி.மீ. விட்டமுள்ள கழிவுநீர் பிரதான குழாய், ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள கழிவுநீர் பிரதான குழாயுடன் இணைக்கப்பட உள்ளது. மேலும் 6வது நிழற்சாலை இணைப்பில் உள்ள 13வது பிரதான தெருவில் புதியதாக பதிக்கப்பட்ட 500 மி.மீ பிரதான குழாயை ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள 450 மி.மீ விட்ட பிரதான குழாயுடன் பதிப்பதற்கான பணி நாளை காலை காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு 7ம் தேதி காலை 6 மணிக்கு பணிகள் முடிக்கப்படும்.

 இப்பணி நடைபெறும் நாட்களில் இமயம் காலனி கழிவு நீரேற்று நிலையத்தின் இயக்கம் நிறுத்தப்படும்.  மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில்  இப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் வழிந்தோடும்  நிலை ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் பகுதி பொறியாளர்களை 81449  30907, 81449 30908 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: