சென்னை: தொடர்ந்து ஓராண்டாக பணிக்கு வராத டிரைவர், கண்டக்டர்கள் 23 பேரை பணி நீக்கம் செய்ய எம்டிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:எம்டிசியை சார்ந்த பணியாளர்கள் 23 ேபர் எவ்விதமான முன்னறிவிப்புமின்றி பணிக்கு வராமல் உள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கமளிக்குமாறு பலமுறை எழுத்து பூர்வமாக அறிவுறுத்தப்பட்டது.