பெங்களூர்: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையன் மீது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஓசூர் சாலையில் இளைஞர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதையறிந்த அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் பாலாஜியும், தலைமை காவலர் பிரகாஷும் கொள்ளையனை பிடிக்க சென்றனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளையன் தலைமை காவலர் பிரகாஷை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.