ஹூப்ளி: இலங்கை ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அங்கீகாரமற்றது), 152 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹூப்ளி நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 269 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 57 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 372 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 430 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்தது.சிறப்பாக விளையாடிய பானுகா ராஜபக்ச 110 ரன் விளாசினார். கமிந்து மெண்டிஸ் 33 ரன், சந்தகன் 2 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.