புதுடெல்லி: கடந்த முறை மோடி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இருந்தபோது, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் யாராவது அவரது டிவிட்டரில் உதவி கோரினால், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதன்மூலம், டிவிட்டரில் எளிதில் தொடர்பு கொள்ளும் அமைச்சர் என்ற பெயர் சுஷ்மாவுக்கு கிடைத்தது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதே பாணியில், உதவி தேவைப்படுவோருக்கு டிவிட்டரில் உடனடியாக உதவி செய்கிறார். இத்தாலிக்கு சென்று தனது குடும்பத்தினர் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதாக மகாலட்சுமி என்ற பெண், ஜெய்சங்கருக்கு டிவிட் செய்தார்.