ஹூப்ளி: இலங்கை ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அங்கீகாரமற்றது), இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கியுள்ளளது. ஹூப்ளி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 269 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 57 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ, 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில், இந்தியா ஏ அணி 372 ரன் குவித்து ஆல் அவுட்டானது.