ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பொன்னேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, ஆழப்படுத்தி தூர்வாரி சீரமைக்க வேண்டும். திருச்சி-சிதம்பரம் சாலை 145 கிலோ மீட்டர் தூரம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையை அகலப்படுத்த தேவையான மண் கிராவல்களை பொன்னேரியில் இருந்து எடுக்க வேண்டும். இதனால் பொன்னேரி ஆழம் பெறும் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.