புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை சிபிஐ, அமலாக்கத் துறை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் நேரடி அன்னிய முதலீட்டை முறைகேடாக பெறுவதற்கு அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதாகவும், இதற்கு அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்து லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது பற்றி சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.