தமிழ்நாட்டுக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் 9.2 டி.எம்.சி தண்ணீரை ஜூன் மாதம் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன், கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: