புதுடெல்லி: நாட்டின் பிற மாநிலங்களில் குடியேறியுள்ள காஷ்மீர் மக்களுக்கு, புலம் பெயர்ந்த மாநிலங்களில் இருந்து வாக்களிக்கும் சிறப்பு உரிமை உள்ளது. இதனை தற்போதைய தேர்தலில் 13,537 பேர் பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் 86 சதவீதத்தினர், அதாவது 11,648 பேர் பாஜவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அனந்த்நாக்கில் இருந்து குடிபெயர்ந்த 8,166 பேரில் 7,251 பேரும், நகரில் புலம்பெயர்ந்த 2,839 பேரில் 2,584 பேரும், பாரமுல்லாவில் 2,532 வாக்காளர்களில் 1,813 பேரும் பாஜ.வுக்கு வாக்களித்தனர். இவை முறையே 71, 56, 23 சதவீதமாகும்.