மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் வாலிபர் பலி

சிவகங்கை: சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி வாலிபர் பலியானார். சிவகங்கை அருகே மேலக்கோட்டை அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அங்குள்ள பொட்டலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. இதில்  மாடு பிடிக்க சென்ற அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த பாலகுரு(27) மாடு முட்டி பலியானார். இவரது உடல் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: