ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஜாகிர் மூசா நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் ஆதரவில் இயங்கிய அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவராக ஜாகிர் மூசா செயல்பட்டுவந்தார். ராணுவம், துணை ராணுவம், காஷ்மீர் போலீசார் இனைந்து நேற்று புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது ஜாகிர் மூசா கொல்லப்பட்டார்.