கரூர் : அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி 37 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை விமர்சித்த, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் நின்றாலும் சரி, கரூர் மக்களவை தொகுதியில் நின்றாலும் சரி, அவர் டெபாசிட் பெற்றுவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பேசியிருந்தார்.