புதுடெல்லி: விமானப்படை பயன்பாட்டிற்காக வானிலிருந்து தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 2.5 டன் எடையுடன் கூடிய இந்த ஏவுகணை 300 கிமீ தூரம் பயணம் சென்று இலக்கும் தாக்கும் திறன் படைத்தது. இது ஒலியை விட மடங்கு வேகத்தில்(2.8 மேக்) செல்லும். இந்த ஏவுகணையை விமானப்படை அந்தமானில் நேற்று சோதித்து பார்த்தது. சுகாய்-30 ரக போர் விமானத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.