காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கெமிக்கல் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ பற்றியது. ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டம் உருவானது. மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அந்த பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளின் கழிவுகளும் அருகே உள்ள ராசாயன கிடங்கில் கொட்டி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.