திருவிழாவை தடுக்க கோயில் கருவறையில் விஷம் குடித்தவரால் பரபரப்பு

ராஜபாளையம்: விருதுநகர்  மாவட்டம், ராஜபாளையம், சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராமு  (45). அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலை நிர்வகித்து வந்தபோது, பணத்தில்  முறைகேடு செய்ததாக கூறி, செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அதே ஊரை சேர்ந்த காட்டுராஜன் (27), புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார். இக்கோயிலில் இன்றும், நாளையும்  திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து  வந்தன. இதனால் விரக்தியடைந்த முத்துராமு, நேற்று முன்தினம் மாலை கோயில் கருவறையில் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு  ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: