சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து நேற்று பகல் 12 மணி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம், புதுச்சேரி உட்பட தேர்தல் நடந்த 39 நாடாளுமன்ற தொகுதி, 22 சட்டமன்ற ெதாகுதியில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியடையும். இதன் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இந்திய தேர்தல் வரலாற்றில் பாரபட்சமாக ஒருதலைபட்சமாக நடுநிலை தவறி ஆளுகின்ற பாஜ அரசுக்கு கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு 274 இடங்களில் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது நயவஞ்சகமான செயல். இது தமிழகத்துக்கு செய்யப்படும் பச்சை துரோகம். காவிரி டெல்டா பகுதிகள் அனைத்தும் வறண்டு நஞ்சை விளைநிலங்கள் பாழாகிவிடும். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் போய்ச் சேரும். ஆனால், தமிழகத்தின் பெரும்பகுதி அழிந்துபோகும்.