சென்னை: இந்துக்கள் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று குறிப்பிடும் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறாரா என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்துக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கமல்ஹாசன் கூறவில்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். கமல் மீது நடத்தப்படும் காலனி வீச்சு தாக்குதலுக்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.