ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பெண்கள் பிரிவில் நவோமி ஒசாகா, கெர்பினி முருகுசா ஆகியோரும், ஆண்கள் பிரிவில் பெடரர், நடால் ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ரோம் நகரில் நடைபெறுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனை நவோமி ஒசாகா(ஜப்பான்) - 33வது இடத்தில் இருக்கும் டொமினிகா சிபுல்கோவா(ஸ்லோவாக்கியா) ஆகியோர் விளையாடினர். அதில் ஒசாகா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் டொமினிகாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இந்தப் போட்டி ஒரு மணி 43 நிமிடங்கள் நடந்தது. இன்னொருப் போட்டியில் தரவரிசையில் 19வது இடத்தில் இருக்கும் கெர்பினி முருகுசா(ஸ்பெயின்) - 30வது வரிசையில் இருக்கும் டேனியாலி ெகாலின்ஸ்(அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.