லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மணமகனின் குடும்பத்தினரை, கோவிலுக்குள் நுழையவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் அமோரா மாவட்டத்தில் வசித்துவரும் ஷோபித் ஜாதவ் என்பவர் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆவார். இந்நிலையில், தனது திருமணத்திற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பி கோவிலுக்கு சென்றார். ஆனால், அங்கிருந்த சிலர், ஷோபித் மற்றும் அவரது குடும்பத்தினரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், மணமகன் கழுத்தில் போடப்பட்டிருந்த பண மாலையை பிய்த்து எரிய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.