குமரி: கோட்சே குறித்து கமல்ஹாசன் கூறிய உண்மை பாஜகவுக்கு கசக்கிறது என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின்போது பேசிய கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியது சர்ச்சையை கிளப்பியது. கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.