சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் மே 23-ம் தேதி வையாகவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார்.