காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் உடம்பில் நீண்ட முடிகளுடன் உள்ள ‘சடை எருமை’ என அழைக்கப்படும் 300 ‘யாக்’குகள், கடுமையான பனிப்பொழிவு காரணமாக உணவு கிடைக்காமல் பரிதாபமாக இறந்துள்ளன.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இம்மாநிலத்தின் வடக்கு பகுதியில், ‘சடை எருமை’ காணப்படுகின்றன. இவற்றின் உடம்பில் நீண்ட முடிகள் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. சிக்கிமில் இவை வீட்டு விலங்குகளாக. பால், இறைச்சிக்காகவும், சுமைகளை தூக்கிச் செல்வதற்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிக்காலத்தில் இவை இறந்து போவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 300 காட்டெருமைகள் உயிரிழந்து விட்டதாக சிக்கிம் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.