சென்னை, மே. 13: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர் கடத்த முயன்ற ஆசாமி பிடிபட்டார். அவரிடம் இருந்து 9.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் ஸ்கேன் மூலம் சோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சர்பூதின் அலி (58) என்பவர் கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்ல வந்திருந்தார். அவரது சூட்கேஸை ஸ்கேன்செய்தபோது அதில் பணம் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த சூட்கேஸை தனியாக எடுத்து திறந்து பார்த்தனர்.