சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது. பூண்டு விளைச்சல் செய்ய சரியான கலவையில் குளிர்ச்சி , வெப்ப காலநிலை அவசியம் என்பதால் வடமாநிலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதியில் பூண்டு விற்பனைக்காக தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’ஒவ்வொரு ஆண்டும் பூண்டு விளைச்சல் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கம் மற்றும் தண்ணீர் பிரச்னை காரணமாக கடும் வறட்சியால் பூண்டு வரத்து குறைந்துள்ளது.