வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் 14ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறக்கிறார். அன்று ேவறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை,, உதயஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 5 நாட்களிலும் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கிறது. வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவுபெறும். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையிலங் நாளை முதல் சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

Related Stories: