திருவனந்தபுரம்: மலையாள சினிமா இயக்குனர் அருண்வர்மா ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் வடக்கன்சேரி, அட்டாணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜவர்மா. இவரது மகன் அருண்வர்மா (27). இவர் கடந்த 4 வருடத்திற்கு மேலாக பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவர் ‘தக் லைப்’ என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை இயக்கினார். இந்த படம் வரும் ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இவர் சமீபத்தில் வெளியான பிரியா வாரியார் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படத்தில் சிறிய வேடத்தில் நடத்திருந்தார்.