சென்னை: தமாகா பாஜவுடன் இணைப்பு பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணி விமானத்தில் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய நான் செல்கின்றேன். அங்குள்ள தமிழர்கள் மத்தியில் நான் பிரச்சாரம் செய்வேன். நாங்கள் கேட்டுத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது இல்லை. அங்குள்ள தமிழர்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்து விட்டனர்.