4 தொகுதியில் சரத்குமார் பிரசாரம்

சென்னை: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  அதன்படி, சூலூர் தொகுதியில் கந்தசாமியை ஆதரித்து 12ம்தேதியும், அரவக்குறிச்சியில் செந்தில்நாதனை ஆதரித்து 14ம்தேதியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டியை ஆதரித்து 15ம்தேதியும், ஓட்டபிடாரம் தொகுதியில் மோகனை ஆதரித்து 16 மற்றும் 17ம்தேதியில் சரத்குமார் பிரசாரம் செய்கிறார். இந்த தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: