சென்னை: சங்கத்திற்கும் என் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாகுவார் தங்கம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நான் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டேன். இதற்கிடையே கடந்த 13.6.2018ம் ஆண்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.