புதுடெல்லி : டெல்லியில் வாக்குப்பதிவு தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்., 11ம் தேதி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தலைநகர் டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் மற்றும் வாக்குசாவடியில் பணிப்புரியும் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் முன்கூட்டியே மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.