காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டு அந்நாட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆண்டு வரவு - செலவு அறிக்கையில் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்த விவகாரத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலில் ராகுல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.