மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு சிமோனா ஹாலேப், பெலிண்டா பென்சிக் ஆகியோர் தகுதிப் பெற்றனர். உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நேற்று நடைப்பெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் சிமோனா ஹாலேப்(ருமேனியா)-ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினார். அதில் உலக தர வரிசையில் 3 இடத்தில் இருக்கும் ஹாலேப் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் 9வது இடத்தில் இருக்கும் ஆஷ்லியை வீழ்த்தி அரையிறுக்கு தகுதிப்ெபற்றார். இதேபோல் 2வது காலியிறுதியில் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒசாகா(ஜப்பான்), 18ம் நிலை வீராங்கனை பெலிண்டா பென்சிக்(ஸ்விட்சர்லாந்து) ஆகியோர் மோதினர். முதல் செட்டை ஒசாகோ 6-3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 2, 3வது செட்களை 2-6, 5-7 என்ற புள்ளி கணக்கில் பென்சிக்கிடம் இழந்த ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.