புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் 3 கேள்விகள் எழுப்பி உள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பாஜ பிரசார கூட்டத்தில், கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். நிருபர்களுக்கு பேட்டி அளித்து கெஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 கேள்விகளை முன் வைக்கிறேன். மாநிலத்தில் சீலிங் நடவடிக்கைக்கு மத்தியில் ஆளும் பாஜவால் ஏன் அவசர சட்டம் கொண்டுவர முடியவில்லை? டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்துக்கு கடந்த பொது தேர்தலில் உறுதியளித்த பாஜ, ஏன் அதனை நிறைவேற்றவில்லை? பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுசரணையாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்து கொள்வது ஏன்?