ஆனால், ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, அந்தப் பெண் தனது குழந்தையை விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் செய்தி திரிபுராவில் வேகமாக பரவியது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, பச்சிளங் குழந்தையை மீட்டனர். பின்னர் தாய் மற்றும் பிறந்த குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், குழந்தையில்லாத தம்பதியினர் அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், திரிபுரா எதிர்க்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், ‘வறுமையில் வாடும் தாய், தனது குழந்தையை விற்க வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மாநில அரசின் நிர்வாக சீர்கேட்டால் இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.
The post கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த பச்சிளங் குழந்தை ரூ.5,000-க்கு விற்பனை: திரிபுராவில் வறுமையின் கொடுமை appeared first on Dinakaran.