புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து அவரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன்மூடப்பட்ட அறையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ரஞ்சன் கோகாய், சில முக்கிய வழக்குகளை வரும் வாரங்களில் கையாள உள்ளதால் கூட இது போல குற்றச்சாட்டுகள் எழலாம் என கூறினார். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாகவும், தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதிகள் பாப்டே, இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணை தனி அறையில் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.